என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீர்வு காணப்படாவிட்டால் விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் பரவும்- ராகுல்காந்தி எச்சரிக்கை
Byமாலை மலர்29 Jan 2021 9:12 PM GMT (Updated: 29 Jan 2021 9:12 PM GMT)
விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணப்படாவிட்டால் அது நாட்டின் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் என்று ராகுல்காந்தி கூறினார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மத்திய அரசு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டது. அதனால்தான் விவசாயிகள் வெகுண்டு எழுந்தனர். மத்திய அரசு, விவசாயிகளை அடிக்கிறது, மிரட்டுகிறது, அவமானப்படுத்த பார்க்கிறது. விவசாயிகளுக்கு செய்ததெல்லாம் குற்றச்செயல்கள் ஆகும்.
தேசிய புலனாய்வு முகமையை பயன்படுத்தி, விவசாயிகளை அச்சுறுத்த முயற்சிக்கிறது. இவற்றை கைவிட்டு, விவசாயிகளுடன் பேசி, தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
அப்படி தீர்வு ஏற்படுத்தாவிட்டால், விவசாயிகள் போராட்டம் மற்ற மாநிலங்களுக்கும் பரவும். இது, விவசாயிகளுடன் நிற்காமல், தொழிலாளர்கள், நகர்ப்புறங்கள், குடிசைப்பகுதிகள் என பரவும். விவசாயிகள், வீட்டுக்கு சென்று விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கக்கூடாது. அவர்கள் வீட்டுக்கு செல்ல மாட்டார்கள்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்து, அவற்றை குப்பை கூடையில் போடுவதுதான் ஒரே தீர்வு.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் கொடி ஏற்றியது பற்றி கேட்டதற்கு ‘‘அவர்களை அங்கு செல்ல விட்டது யார்? அவர்களை தடுத்து நிறுத்துவது உள்துறை அமைச்சகத்தின் வேலை தானே?’’ என்று ராகுல்காந்தி கூறினார்.
ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தாக்குவதன் மூலம் பிரதமர் மோடி, நாட்டை பலவீனப்படுத்துகிறார். இது, தேசவிரோத சக்திகளுக்குத்தான் பலன் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுபோல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் நம்பிக்கைதான் நாட்டின் மூலதனம். அந்த நம்பிக்கையை நொறுக்குவது குற்றம். அவர்களின் மனக்குறைகளை கேட்காமல் இருப்பது பாவம். அதிலும், அவர்களை மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் பெரும் பாவம். விவசாயிகள் மீதான தாக்குதல், நாட்டின் மீதான தாக்குதல். பிரதமர் மோடி, நாட்டை பலவீனப்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X