search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடிய விடிய போராடும் விவசாயிகள்
    X
    விடிய விடிய போராடும் விவசாயிகள்

    போராட்ட களத்தை விட்டு காலி செய்ய மாட்டோம் - காசிப்பூர் விவசாயிகள் உறுதி

    போராட்ட களத்தை விட்டு காலி செய்ய மாட்டோம் என காசிப்பூர் விவசாயிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கடந்த 26-ம் தேதி மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த பேரணி வன்முறையாக மாறியது.

    அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 400 போலீசார் காயமடைந்தனர். இதைப்போல போலீசார் நடத்திய தடியடியில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர்.

    இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியிலும் விவசாயிகளின் ஒரு பிரிவினர் டெல்லி செங்கோட்டையில் மத கொடி ஒன்றை ஏற்றி வைத்தனர். இது நாடு முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

    டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் 25 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும் இந்த வன்முறை தொடர்பாக விவசாய அமைப்பு தலைவர்கள் 37 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதால்தான், விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

    அது மட்டுமின்றி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னரே பேரணியை தொடங்கியது, அனுமதித்த எண்ணிக்கையை விட அதிக டிராக்டர்களை களமிறக்கியது, அனுமதிக்காத பாதைகளில் சென்றது என பல்வேறு சிக்கல்களுக்கு விவசாய அமைப்பு தலைவர்களே காரணம் என போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த 37 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி இவர்கள் அனைவரும் தங்கள் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், காசிப்பூர் எல்லையில் (டெல்லி-உத்தரப்பிரதேசம்) வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி  உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். காஜிப்பூர் எல்லையில் உள்ள பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட், நாங்கள் போராட்ட களத்தை விட்டு காலி செய்ய மாட்டோம் என்றார்.
    Next Story
    ×