search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 3 வீரர்கள் காயம்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
    ஜம்மு:

    தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குல்காமில் உள்ள கானபாலில் ஷம்சிபுராவின் பொதுப் பகுதியில்  காலை 10.15 மணியளவில் ராணுவ வீரர்கள் சாலை திறப்பு விருந்தில் பங்கேற்றபோது பயங்கரவாதிகள் திடீரென கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த பயங்கரவாத தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீநகரில் உள்ள ராணுவத்தின்-92 அடிப்படை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×