என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவனந்தபுரம் அருகே கார்-லாரி மோதல்: 5 பேர் பலி
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்த புரத்தை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காரில் கொல்லம் அருகே சிரக்கரா பகுதியை சேர்ந்த 5 பேர் இருந்தனர்.
இந்த கார் நேற்று இரவு 11 மணி அளவில் திருவனந்தபுரம் கல்லம்பலம் தொட்டகாட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு சென்ற மீன் லாரி, மீது மோதியது. இதில் கார் நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.
இதில் காரில் பயணம் செய்த விஷ்ணு, ராஜீவ், அருண் மற்றும் சுதீஷ் உள்பட 5 பேர் பலியாகினர். காரில் பயணம் செய்த மற்றொருவர் அடையாளம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விபத்து ஏற்படுத்திய லாரியை கைப்பற்றி அதன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்