என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் போராடுபவர்கள் பயங்கரவாதிகள்: மந்திரி பி.சி.பட்டீல் குற்றச்சாட்டு
Byமாலை மலர்27 Jan 2021 1:55 AM GMT (Updated: 27 Jan 2021 1:55 AM GMT)
பயங்கரவாதிகள் விவசாயிகளின் பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள். டெல்லியில் போராடுபவர்கள் பயங்கரவாதிகள். பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் குற்றம் சாட்டியுள்ளார்.
கொப்பல் :
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கொப்பலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் நேற்று அவர்கள் செங்கோட்டையில் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலவரம் நடத்தியவர்கள் பயங்கரவாதிகள். அங்கு போராடும் விவசாயிகளுக்கு சில வெளிநாடுகளின் ஆதரவும், காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலும் உள்ளது. அதனால் தான் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் விவசாயிகளின் பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள். என்ன செய்தாலும் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு மற்றும் பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த முடியாது. உண்மையான விவசாயிகள் யாரும் போராடவில்லை. டெல்லியில் போராடுபவர்கள் பயங்கரவாதிகள். பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை முன்னாள் மந்திரி எச்.கே.பட்டீல் நியாயப்படுத்துகிறார். அவர் என்றாவது விவசாயம் செய்துள்ளாரா?. விதைகள் விதைத்தது உண்டா?.
இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கொப்பலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் நேற்று அவர்கள் செங்கோட்டையில் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலவரம் நடத்தியவர்கள் பயங்கரவாதிகள். அங்கு போராடும் விவசாயிகளுக்கு சில வெளிநாடுகளின் ஆதரவும், காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலும் உள்ளது. அதனால் தான் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் விவசாயிகளின் பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள். என்ன செய்தாலும் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு மற்றும் பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த முடியாது. உண்மையான விவசாயிகள் யாரும் போராடவில்லை. டெல்லியில் போராடுபவர்கள் பயங்கரவாதிகள். பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை முன்னாள் மந்திரி எச்.கே.பட்டீல் நியாயப்படுத்துகிறார். அவர் என்றாவது விவசாயம் செய்துள்ளாரா?. விதைகள் விதைத்தது உண்டா?.
இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X