என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: மத்திய வேளாண் அமைச்சர் தோமர்
Byமாலை மலர்25 Jan 2021 12:31 PM GMT (Updated: 25 Jan 2021 12:31 PM GMT)
டெல்லியில் சுமார் 60 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என வேளாண் அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி மாநில எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.
நாளை விவசாயிகள் ஒரு லட்சம் டிராக்டர் பேரணியை நடத்துகிறார்கள். மத்திய அரசு இதற்கு கடுமையான பாதுகாப்பை வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘‘விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்’’ என்றார்.
ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டம் வாபஸ் என விவசாயிகள் தெரிவித்துதுள்ளனர். அதேவேளையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X