என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்
Byமாலை மலர்25 Jan 2021 5:47 AM GMT (Updated: 25 Jan 2021 5:47 AM GMT)
சிக்கிம் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றதை இந்திய வீரர்கள் முறியடித்தனர்.
காங்டாக்:
சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லை வழியாக சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதனைக் கவனித்த இந்திய வீரர்கள், சீன வீரர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் பகுதிக்கு திரும்பிச் செல்லும்படி கூறினர்.
ஆனால் சீன வீரர்கள் ஊடுருவல் முயற்சியை கைவிடாமல் முன்னேற முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் சீன தரப்பில் 20 வீரர்களும், இந்திய தரப்பில் 4 வீரர்களும் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் நிலையிலான 9வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் சீன வீரர்களின் ஊடுருவல் முயற்சியின் மூலம் சிக்கிம் எல்லையில் புதிய பிரச்சனை உருவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X