என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை
Byமாலை மலர்25 Jan 2021 2:42 AM GMT (Updated: 25 Jan 2021 2:42 AM GMT)
கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாநிலத்தில் புதிதாக 573 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு :
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 573 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மாநிலத்தில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 197 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 401 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 16 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 7 ஆயிரத்து 510 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் 202 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக கொரோனா பாதித்தோரில், பல்லாரியில் 6 பேர், பெலகாவியில் 18 பேர், பெங்களூரு புறநகரில் 9 பேர், பெங்களூரு நகரில் 306 பேர், பீதரில் 2 பேர், சாம்ராஜ்நகரில் 2 பேர், சிக்பள்ளாப்பூரில் 19 பேர், சிக்கமகளூருவில் 4 பேர், சித்ரதுர்காவில் 7 பேர், தட்சிண கன்னடாவில் 42 பேர், தாவணகெரேயில் 10 பேர், தார்வாரில் 7 பேர், கதக்கில் 5 பேர், ஹாசனில் 15 பேர், ஹாவேரியில் 3 பேர், கலபுரகியில் 16 பேர், குடகில் 5 பேர், கோலாரில் ஒருவர், மண்டியாவில் 5 பேர், மைசூருவில் 27 பேர், ராய்ச்சூரில் ஒருவர், சிவமொக்காவில் 5 பேர், துமகூருவில் 31 பேர், உடுப்பியில் 17 பேர், உத்தரகன்னடாவில் 8 பேர், விஜயாப்புராவில் 2 பேர் உள்ளனர்.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 2 பேர், தட்சிண கன்னடா, மைசூருவில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் நேற்று 2,015 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் பாகல்கோட்டை, கொப்பல், ராமநகர், யாதகிரி ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 16 மாவட்டங்களில் புதிய பாதிப்பு 10-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. 27 மாவட்டங்களில் நேற்று வைரஸ் தொற்றுக்கு யாரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 573 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மாநிலத்தில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 197 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 401 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 16 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 7 ஆயிரத்து 510 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் 202 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக கொரோனா பாதித்தோரில், பல்லாரியில் 6 பேர், பெலகாவியில் 18 பேர், பெங்களூரு புறநகரில் 9 பேர், பெங்களூரு நகரில் 306 பேர், பீதரில் 2 பேர், சாம்ராஜ்நகரில் 2 பேர், சிக்பள்ளாப்பூரில் 19 பேர், சிக்கமகளூருவில் 4 பேர், சித்ரதுர்காவில் 7 பேர், தட்சிண கன்னடாவில் 42 பேர், தாவணகெரேயில் 10 பேர், தார்வாரில் 7 பேர், கதக்கில் 5 பேர், ஹாசனில் 15 பேர், ஹாவேரியில் 3 பேர், கலபுரகியில் 16 பேர், குடகில் 5 பேர், கோலாரில் ஒருவர், மண்டியாவில் 5 பேர், மைசூருவில் 27 பேர், ராய்ச்சூரில் ஒருவர், சிவமொக்காவில் 5 பேர், துமகூருவில் 31 பேர், உடுப்பியில் 17 பேர், உத்தரகன்னடாவில் 8 பேர், விஜயாப்புராவில் 2 பேர் உள்ளனர்.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 2 பேர், தட்சிண கன்னடா, மைசூருவில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் நேற்று 2,015 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் பாகல்கோட்டை, கொப்பல், ராமநகர், யாதகிரி ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 16 மாவட்டங்களில் புதிய பாதிப்பு 10-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. 27 மாவட்டங்களில் நேற்று வைரஸ் தொற்றுக்கு யாரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X