search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை

    கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாநிலத்தில் புதிதாக 573 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 573 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மாநிலத்தில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 197 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 401 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 16 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 7 ஆயிரத்து 510 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் 202 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    புதிதாக கொரோனா பாதித்தோரில், பல்லாரியில் 6 பேர், பெலகாவியில் 18 பேர், பெங்களூரு புறநகரில் 9 பேர், பெங்களூரு நகரில் 306 பேர், பீதரில் 2 பேர், சாம்ராஜ்நகரில் 2 பேர், சிக்பள்ளாப்பூரில் 19 பேர், சிக்கமகளூருவில் 4 பேர், சித்ரதுர்காவில் 7 பேர், தட்சிண கன்னடாவில் 42 பேர், தாவணகெரேயில் 10 பேர், தார்வாரில் 7 பேர், கதக்கில் 5 பேர், ஹாசனில் 15 பேர், ஹாவேரியில் 3 பேர், கலபுரகியில் 16 பேர், குடகில் 5 பேர், கோலாரில் ஒருவர், மண்டியாவில் 5 பேர், மைசூருவில் 27 பேர், ராய்ச்சூரில் ஒருவர், சிவமொக்காவில் 5 பேர், துமகூருவில் 31 பேர், உடுப்பியில் 17 பேர், உத்தரகன்னடாவில் 8 பேர், விஜயாப்புராவில் 2 பேர் உள்ளனர்.

    கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 2 பேர், தட்சிண கன்னடா, மைசூருவில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் நேற்று 2,015 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் பாகல்கோட்டை, கொப்பல், ராமநகர், யாதகிரி ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 16 மாவட்டங்களில் புதிய பாதிப்பு 10-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. 27 மாவட்டங்களில் நேற்று வைரஸ் தொற்றுக்கு யாரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×