என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிராக்டர் பேரணிக்காக எந்த வழியை பயன்படுத்த உள்ளார்கள் என்ற தகவலை விவசாயிகள் அளிக்கவில்லை - டெல்லி போலீஸ்
Byமாலை மலர்23 Jan 2021 5:19 PM GMT (Updated: 23 Jan 2021 5:19 PM GMT)
டிராக்டர் பேரணிக்காக எந்த சாலை வழியை பயன்படுத்த உள்ளனர் எந்த தகவலை விவசாயிகள் அளிக்கவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:-
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 60-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளும் இடையே 11 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அனைத்துக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.
இதற்கிடையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி விவசாயிகள் சார்பில் மாபெரும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், டிராக்டர் பேரணி எந்த சாலை வழியாக நடைபெறும் என்ற எழுத்துப்பூர்வ தகவலை தற்போதுவரை விவசாயிகள் தெரிவிக்கவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க பிரதிநிதி யோகேந்திர யாதவ், திட்டமிட்டபடி 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும். தடுப்புகள் திறக்கப்பட்டு நாம் டெல்லிக்குள் நுழைவோம். எங்களுக்கும் போலீசாருக்கும் இடையே பேரணி நடைபெறும் சாலை வழி தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இறுதி தகவல்கள் இன்று இரவு தெரிவிக்கப்படும்’ என்றார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 60-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளும் இடையே 11 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அனைத்துக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.
இதற்கிடையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி விவசாயிகள் சார்பில் மாபெரும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த டிராக்டர் பேரணி டெல்லியின் எந்த சாலை வழியில் நடைபெறும் என்பது குறித்த தகவலை எழுத்துப்பூர்வமாக தரும்படி விவசாயிகளிடம் டெல்லி போலீசார் கேட்டிருந்தனர்.
இந்நிலையில், டிராக்டர் பேரணி எந்த சாலை வழியாக நடைபெறும் என்ற எழுத்துப்பூர்வ தகவலை தற்போதுவரை விவசாயிகள் தெரிவிக்கவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க பிரதிநிதி யோகேந்திர யாதவ், திட்டமிட்டபடி 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும். தடுப்புகள் திறக்கப்பட்டு நாம் டெல்லிக்குள் நுழைவோம். எங்களுக்கும் போலீசாருக்கும் இடையே பேரணி நடைபெறும் சாலை வழி தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இறுதி தகவல்கள் இன்று இரவு தெரிவிக்கப்படும்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X