என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
125-வது பிறந்தநாள்... நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மத்திய மந்திரி
Byமாலை மலர்23 Jan 2021 4:19 AM GMT (Updated: 23 Jan 2021 4:19 AM GMT)
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் நிலையில், நேதாஜிக்கு பலரும் மரியாதை செலுத்தியவண்ணம் உள்ளனர்.
கட்டாக்:
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைகளுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் நேதாஜி குறித்த நினைவுகளையும், அவரது புகைப்படங்களையும் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள நேதாஜி சிலைக்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை பராக்கிரம தினமாக (வீர தினம்) கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொல்கத்தாவில் நடக்கும் முதலாவது பராக்கிரம தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X