search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி ஜெயந்த் பாட்டீல்
    X
    மந்திரி ஜெயந்த் பாட்டீல்

    எனக்கும் முதல்-மந்திரி ஆக ஆசை: மந்திரி ஜெயந்த் பாட்டீல்

    எல்லா அரசியல்வாதிகளை போலவும், எனக்கும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளதாக மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறினார்.
    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மாநில நீர்வளத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெயந்த் பாட்டீல். இவர் சாங்கிலியில் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் எல்லா அரசியல்வாதிகளை போல தனக்கும் முதல்-மந்திரியாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என கூறினார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எல்லா அரசியல்வாதிகளும் முதல்-மந்திரியாக ஆக வேண்டும் என விரும்புவார்கள். அதுபோல நானும் முதல்-மந்திரியாக கண்டிப்பாக ஆசைப்பட வேண்டும். சரிதானே?. ஆனால் இந்த விவகாரத்தில் கட்சியும், சரத்பவாரும் தான் இறுதி முடிவு எடுப்பார்கள். எல்லோரும் முதல்-மந்தியாக விரும்புவார்கள். என்னை போல நீண்ட காலமாக அரசியலில் உழைத்தவர்கள் முதல்-மந்திரியாக ஆசைப்படுவார்கள்.

    எனது வாக்காளர்களும் கண்டிப்பாக நான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என விரும்ப வேண்டும். எனவே நான் முதல்-மந்திரியாக விரும்புகிறேன். ஆனால் சூழ்நிலையும், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும் முக்கியம். எங்களுக்கு 54 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    54 எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு முதல்-மந்திரி ஆவதில் சாத்தியமில்லை. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அதிகரித்து, கட்சி விரிவடைந்தால் அதன்பிறகு சரத்பவார் என்ன முடிவு செய்கிறாரோ அது நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் ஜெயந்த் பாட்டீல் முதல்-மந்திரி ஆக வேண்டும் என கூறியது குறித்து துணை முதல்-மந்திரி அஜித்பவாரிடம் கேட்ட போது, "அவர் வெளிப்படுத்திய ஆசைகளுக்கு எல்லாம், நான் ஆதரவு தருகிறேன் " என வேடிக்கையாக தெரிவித்தார்.
    Next Story
    ×