என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனக்கும் முதல்-மந்திரி ஆக ஆசை: மந்திரி ஜெயந்த் பாட்டீல்
Byமாலை மலர்23 Jan 2021 3:12 AM GMT (Updated: 23 Jan 2021 3:12 AM GMT)
எல்லா அரசியல்வாதிகளை போலவும், எனக்கும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளதாக மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறினார்.
மும்பை :
தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மாநில நீர்வளத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெயந்த் பாட்டீல். இவர் சாங்கிலியில் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் எல்லா அரசியல்வாதிகளை போல தனக்கும் முதல்-மந்திரியாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எல்லா அரசியல்வாதிகளும் முதல்-மந்திரியாக ஆக வேண்டும் என விரும்புவார்கள். அதுபோல நானும் முதல்-மந்திரியாக கண்டிப்பாக ஆசைப்பட வேண்டும். சரிதானே?. ஆனால் இந்த விவகாரத்தில் கட்சியும், சரத்பவாரும் தான் இறுதி முடிவு எடுப்பார்கள். எல்லோரும் முதல்-மந்தியாக விரும்புவார்கள். என்னை போல நீண்ட காலமாக அரசியலில் உழைத்தவர்கள் முதல்-மந்திரியாக ஆசைப்படுவார்கள்.
எனது வாக்காளர்களும் கண்டிப்பாக நான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என விரும்ப வேண்டும். எனவே நான் முதல்-மந்திரியாக விரும்புகிறேன். ஆனால் சூழ்நிலையும், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும் முக்கியம். எங்களுக்கு 54 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
54 எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு முதல்-மந்திரி ஆவதில் சாத்தியமில்லை. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அதிகரித்து, கட்சி விரிவடைந்தால் அதன்பிறகு சரத்பவார் என்ன முடிவு செய்கிறாரோ அது நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் ஜெயந்த் பாட்டீல் முதல்-மந்திரி ஆக வேண்டும் என கூறியது குறித்து துணை முதல்-மந்திரி அஜித்பவாரிடம் கேட்ட போது, "அவர் வெளிப்படுத்திய ஆசைகளுக்கு எல்லாம், நான் ஆதரவு தருகிறேன் " என வேடிக்கையாக தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மாநில நீர்வளத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெயந்த் பாட்டீல். இவர் சாங்கிலியில் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் எல்லா அரசியல்வாதிகளை போல தனக்கும் முதல்-மந்திரியாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எல்லா அரசியல்வாதிகளும் முதல்-மந்திரியாக ஆக வேண்டும் என விரும்புவார்கள். அதுபோல நானும் முதல்-மந்திரியாக கண்டிப்பாக ஆசைப்பட வேண்டும். சரிதானே?. ஆனால் இந்த விவகாரத்தில் கட்சியும், சரத்பவாரும் தான் இறுதி முடிவு எடுப்பார்கள். எல்லோரும் முதல்-மந்தியாக விரும்புவார்கள். என்னை போல நீண்ட காலமாக அரசியலில் உழைத்தவர்கள் முதல்-மந்திரியாக ஆசைப்படுவார்கள்.
எனது வாக்காளர்களும் கண்டிப்பாக நான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என விரும்ப வேண்டும். எனவே நான் முதல்-மந்திரியாக விரும்புகிறேன். ஆனால் சூழ்நிலையும், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும் முக்கியம். எங்களுக்கு 54 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
54 எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு முதல்-மந்திரி ஆவதில் சாத்தியமில்லை. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அதிகரித்து, கட்சி விரிவடைந்தால் அதன்பிறகு சரத்பவார் என்ன முடிவு செய்கிறாரோ அது நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் ஜெயந்த் பாட்டீல் முதல்-மந்திரி ஆக வேண்டும் என கூறியது குறித்து துணை முதல்-மந்திரி அஜித்பவாரிடம் கேட்ட போது, "அவர் வெளிப்படுத்திய ஆசைகளுக்கு எல்லாம், நான் ஆதரவு தருகிறேன் " என வேடிக்கையாக தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X