என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை
Byமாலை மலர்23 Jan 2021 1:55 AM GMT (Updated: 23 Jan 2021 1:55 AM GMT)
கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் நேற்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், மாநிலத்தில் புதிதாக 324 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு :
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 92 ஆயிரத்து 581 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 324 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 34 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 190 ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 890 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 15 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 6,985 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் 165 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 42 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரத்து 22 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
புதிதாக கொரோனா பாதித்தோரில், பாகல்கோட்டையில் 3 பேர், பல்லாரியில் 7 பேர், பெலகாவியில் 12 பேர், பெங்களூரு புறநகரில் 8 பேர், பெங்களூரு நகரில் 160 பேர், பீதரில் ஒருவர், சாம்ராஜ்நகரில் 3 பேர், சிக்பள்ளாப்பூரில் 14 பேர், சிக்கமகளூருவில் 9 பேர், சித்ரதுர்காவில் 8 பேர், தட்சிண கன்னடாவில் 12 பேர், தாவணகெரேயில் 5 பேர், தார்வாரில் 2 பேர், கதக்கில் 4 பேர், ஹாசனில் 6 பேர், கலபுரகியில் 9 பேர், குடகில் 5 பேர், கோலாரில் 3 பேர், மண்டியாவில் 3 பேர், மைசூருவில் 19 பேர், ராமநகரில் ஒருவர், சிவமொக்காவில் ஒருவர், துமகூருவில் 18 பேர், உடுப்பியில் 3 பேர், உத்தரகன்னடாவில் 3 பேர், விஜயாப்புராவில் 3 பேர், யாதகிரியில் 2 பேர் உள்ளனர். கொரோனாவுக்கு பெங்களூருவில் 2 பேர், தட்சிண கன்னடாவில் ஒருவர் என மொத்தம் 3 பேர் இறந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 92 ஆயிரத்து 581 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 324 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 34 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 190 ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 890 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 15 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 6,985 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் 165 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 42 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரத்து 22 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
புதிதாக கொரோனா பாதித்தோரில், பாகல்கோட்டையில் 3 பேர், பல்லாரியில் 7 பேர், பெலகாவியில் 12 பேர், பெங்களூரு புறநகரில் 8 பேர், பெங்களூரு நகரில் 160 பேர், பீதரில் ஒருவர், சாம்ராஜ்நகரில் 3 பேர், சிக்பள்ளாப்பூரில் 14 பேர், சிக்கமகளூருவில் 9 பேர், சித்ரதுர்காவில் 8 பேர், தட்சிண கன்னடாவில் 12 பேர், தாவணகெரேயில் 5 பேர், தார்வாரில் 2 பேர், கதக்கில் 4 பேர், ஹாசனில் 6 பேர், கலபுரகியில் 9 பேர், குடகில் 5 பேர், கோலாரில் 3 பேர், மண்டியாவில் 3 பேர், மைசூருவில் 19 பேர், ராமநகரில் ஒருவர், சிவமொக்காவில் ஒருவர், துமகூருவில் 18 பேர், உடுப்பியில் 3 பேர், உத்தரகன்னடாவில் 3 பேர், விஜயாப்புராவில் 3 பேர், யாதகிரியில் 2 பேர் உள்ளனர். கொரோனாவுக்கு பெங்களூருவில் 2 பேர், தட்சிண கன்னடாவில் ஒருவர் என மொத்தம் 3 பேர் இறந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X