search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை

    கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் நேற்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், மாநிலத்தில் புதிதாக 324 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 92 ஆயிரத்து 581 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 324 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 34 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 190 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரேநாளில் 890 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 15 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 6,985 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் 165 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 42 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரத்து 22 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    புதிதாக கொரோனா பாதித்தோரில், பாகல்கோட்டையில் 3 பேர், பல்லாரியில் 7 பேர், பெலகாவியில் 12 பேர், பெங்களூரு புறநகரில் 8 பேர், பெங்களூரு நகரில் 160 பேர், பீதரில் ஒருவர், சாம்ராஜ்நகரில் 3 பேர், சிக்பள்ளாப்பூரில் 14 பேர், சிக்கமகளூருவில் 9 பேர், சித்ரதுர்காவில் 8 பேர், தட்சிண கன்னடாவில் 12 பேர், தாவணகெரேயில் 5 பேர், தார்வாரில் 2 பேர், கதக்கில் 4 பேர், ஹாசனில் 6 பேர், கலபுரகியில் 9 பேர், குடகில் 5 பேர், கோலாரில் 3 பேர், மண்டியாவில் 3 பேர், மைசூருவில் 19 பேர், ராமநகரில் ஒருவர், சிவமொக்காவில் ஒருவர், துமகூருவில் 18 பேர், உடுப்பியில் 3 பேர், உத்தரகன்னடாவில் 3 பேர், விஜயாப்புராவில் 3 பேர், யாதகிரியில் 2 பேர் உள்ளனர். கொரோனாவுக்கு பெங்களூருவில் 2 பேர், தட்சிண கன்னடாவில் ஒருவர் என மொத்தம் 3 பேர் இறந்தனர்.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×