search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளவரசி
    X
    இளவரசி

    சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை

    சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்த நிலையில் மூச்சுத்திணறலால் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி ஆனது. இதனைத்தொடர்ந்து விக்டோரி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அவருக்கு  தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 2 பெண் கைதிகள், அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது. சசிகலாவுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×