என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உட்கட்சி தேர்தல் எப்போது? -காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி ஆலோசனை
Byமாலை மலர்22 Jan 2021 5:48 AM GMT (Updated: 22 Jan 2021 5:48 AM GMT)
ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பாக கருதப்படும் காரிய கமிட்டி கூட்டம் இன்று தொடங்கியது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் காரிய கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் ஆலோசனைகளை சோனியா காந்தியிடம் பகிர்ந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், உட்கட்சி தேர்தல், மத்திய பட்ஜெட், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுக்கிறார்கள். ராகுல் தலைவர் பதவிக்கு வர மறுத்துவிட்டால், உட்கட்சித் தேர்தல் நடத்தி முடிக்கும்வரை சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் கேட்டுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X