search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: மந்திரி சுதாகர் தகவல்

    கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருகிறது. இந்த தடுப்பூசியால் பக்க விளைவு எதுவும் இல்லை என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
    உப்பள்ளி :

    கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று உப்பள்ளிக்கு வந்தார். அவர் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மந்திரி சுதாகர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டிலேயே கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. மாநில அரசு திறம்பட செயல்பட்டு கொரோனா பரவலை குறைத்துள்ளது. தற்போது மாநிலத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருகிறது. இந்த தடுப்பூசியால் பக்க விளைவு எதுவும் இல்லை. தடுப்பூசி போட்டவர்களுக்கு வலி வந்தால் அவர்களை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    பல்லாரியில் தடுப்பூசி போட்ட காரணத்தால் ஒருவர் உயிரிழந்தார் என கேட்கிறீர்கள். தடுப்பூசி போட்டு கொண்டவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மாரடைப்புக்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட கூடாது. தடுப்பூசி போட்டு யாராவது மரணம் அடைந்தால், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவருடைய மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படும். தடுப்பூசி போடுவது நல்லது தான். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறைய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×