என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்தியா
Byமாலை மலர்20 Jan 2021 10:25 AM GMT (Updated: 20 Jan 2021 10:25 AM GMT)
நேபாளம், பூடான், வங்காளதேசம் உள்பட 6 நாடுகளுக்கு இந்திய அரசு கொரோனா தடுப்பூசி வழங்குகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தடுப்பூசிகளை தங்களுக்கும் வழங்க வேண்டுமென அண்டைநாடுகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தன. அந்த கோரிக்கையை ஏற்று நல்லெண்ண அடிப்படையில் அண்டைநாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்க முன்வந்துள்ளது.
அதன்படி, பூடான், மாலத்தீவுகள், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது.
குறிப்பாக, அண்டைநாடான நேபாளத்திற்கு 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நாளை வழங்கப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசிகளை நல்லெண்ண அடிப்படையில் வழங்கும் இந்தியாவுக்கு அண்டைநாடுகள் நன்றி தெரிவித்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X