என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தரிசன டோக்கனுக்காக வந்து ஏமாற வேண்டாம்- பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
Byமாலை மலர்20 Jan 2021 6:37 AM GMT (Updated: 20 Jan 2021 11:09 AM GMT)
வருகிற 24, 26-ந்தேதிகளில் விடுமுறை நாள் என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆலோசித்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் ஆன்லைனில் விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறது.
மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் பூதேவி காம்ப்ளக்சில் வார நாட்களில் 6 முதல் 7 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்களும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் 8 முதல் 9 ஆயிரம் டோக்கன்களையும் அளித்து வருகிறது.
டோக்கன்கள் தீர்ந்து போனாலும், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் நோக்கில் அதற்கடுத்த நாட்களுக்கான டோக்கன்களும் முன்னதாக அளிக்க தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
தரிசன டிக்கெட் அல்லது டோக்கன்கள் உள்ள பக்தர்கள் மட்டுமே நடைபாதை வழியாகவும், மலை சாலை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். எனவே ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல தரிசன டிக்கெட் கட்டாயமாகும்.
இந்த நிலையில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 24, 26-ந்தேதிகளில் விடுமுறை நாள் என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆலோசித்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவேண்டும்.
இலவச தரிசன டோக்கன்கள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குடும்பத்துடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் ஆன்லைனில் விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறது.
மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் பூதேவி காம்ப்ளக்சில் வார நாட்களில் 6 முதல் 7 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்களும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் 8 முதல் 9 ஆயிரம் டோக்கன்களையும் அளித்து வருகிறது.
டோக்கன்கள் தீர்ந்து போனாலும், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் நோக்கில் அதற்கடுத்த நாட்களுக்கான டோக்கன்களும் முன்னதாக அளிக்க தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
தரிசன டிக்கெட் அல்லது டோக்கன்கள் உள்ள பக்தர்கள் மட்டுமே நடைபாதை வழியாகவும், மலை சாலை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். எனவே ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல தரிசன டிக்கெட் கட்டாயமாகும்.
இந்த நிலையில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 24, 26-ந்தேதிகளில் விடுமுறை நாள் என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆலோசித்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவேண்டும்.
இலவச தரிசன டோக்கன்கள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குடும்பத்துடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X