search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    பதவி வந்தவுடன் ஏழைகளை மந்திரிகள் மறந்து விடுகிறார்கள்: குமாரசாமி

    பதவி வந்ததும் ஏழைகளுக்கு நல்லது செய்ய மந்திரிகள் உள்பட அரசியல் தலைவர்கள் அனைவரும் மறந்து விடுகிறார்கள் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
    ராமநகர் :

    ராமநகரில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. இதுவரை அவர் தாலுகா அளவில் ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டு வந்தார். மந்திரியாகி இருப்பதால், இனிமேல் மாநில அளவில் சி.பி.யோகேஷ்வர் முறைகேட்டில் ஈடுபடுவார். பதவி வந்ததும் ஏழைகளுக்கு நல்லது செய்ய மந்திரிகள் உள்பட அரசியல் தலைவர்கள் அனைவரும் மறந்து விடுகிறார்கள். 

    நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து பார்க்கிறேன், மந்திரி பதவிக்காக கடுமையான போட்டி போடுகிறார்கள். மந்திரிகளுக்கு என்று கொம்பு உள்ளதா?. மந்திரி பதவி கிடைப்பது மக்களுக்கு சேவை செய்யத்தான். அதனை பலர் மறந்து விடுகின்றனர். சி.பி.யோகேஷ்வர் எனது நண்பர். அரசியலில் அவருக்கும், எனக்கும் பகை இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் அவரும், நானும் நண்பர்களாகத்தான் இருக்கிறோம். 

    தொண்டர்களின் கழுத்தை நெரித்து கொண்டு, நண்பராக இருக்க விரும்பவில்லை. அரசியல் வேறு, சொந்த வாழ்க்கை வேறு. நான் பதவிக்காக யாரிடமும் சென்றதில்லை. பதவியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்கள் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தி வருகிறேன். ஜனதாதளம் (எஸ்) கட்சியையும், என்னையும் யாராலும் அழிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×