என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 29-ம் தேதி தொடக்கம் - கேள்விநேரத்திற்கு அனுமதி
Byமாலை மலர்19 Jan 2021 12:03 PM GMT (Updated: 19 Jan 2021 12:03 PM GMT)
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்கப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்த ஆண்டின் முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி, வரும் 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
வரும் 29-ம் தேதி காலை 9 மணிமுதல் 2 மணி வரை மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் கேள்விநேரம் மற்றும் பூஜ்ஜியம் நேர விவாதத்திற்கு (ஜீரோ ஹவர்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் பங்கேற்றுகும் எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்ற கேன்டினில் நடைமுறையில் இருந்துவந்த உணவு மானியம் முற்றிலும் நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகள் போராட்டம், கொரோனா தடுப்பூசி மீதான சந்தேகம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பு திட்டமிட்டுள்ளன.
இந்த ஆண்டின் முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி, வரும் 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
வரும் 29-ம் தேதி காலை 9 மணிமுதல் 2 மணி வரை மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் கேள்விநேரம் மற்றும் பூஜ்ஜியம் நேர விவாதத்திற்கு (ஜீரோ ஹவர்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் பங்கேற்றுகும் எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்ற கேன்டினில் நடைமுறையில் இருந்துவந்த உணவு மானியம் முற்றிலும் நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகள் போராட்டம், கொரோனா தடுப்பூசி மீதான சந்தேகம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பு திட்டமிட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X