என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Byமாலை மலர்19 Jan 2021 7:45 AM GMT (Updated: 19 Jan 2021 9:41 AM GMT)
சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
புதுடெல்லி:
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது தவறு அல்ல. அதற்காகதான் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்கள். தேர்தல் அறிவிப்புக்கு பிறகுதான் அரசியல் பேசுவோம்.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
கேள்வி:-சசிகலா வெளியே வரும்பட்சத்தில் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- அதற்கான வாய்ப்பு கிடையாது. அவர் அ.தி.மு.க. கட்சியிலேயே இல்லை. அவர் அ.தி.மு.க.வில் சேர 100 சதவீதம் வாய்ப்பில்லை.
கேள்வி:- சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்களே?
பதில்:- பா.ஜனதாவில் அப்படி யார் சொன்னது என்பதை சொல்லுங்கள். அதற்கான பேச்சுவார்த்தையே கிடையாது. அ.தி.மு.க.வில் இதை தெளிவாக முடிவு செய்யப்பட்டு இன்றைக்கும் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.
இன்றைக்கு தமிழகத்தில் அவரிடம் இருந்த பெரும்பாலானோர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். அவரிடம் சிலர் மட்டுமே உள்ளனர். புரட்சித்தலைவி அம்மா, சசிகலாவை பல காலம் நீக்கி வைத்து இருந்தார். அம்மா இறந்த பிறகுதான் அவருக்கு பதவி கொடுத்தார்கள். அம்மா உயிரோடு இருந்தபோது அவர் கட்சியிலேயே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது தவறு அல்ல. அதற்காகதான் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்கள். தேர்தல் அறிவிப்புக்கு பிறகுதான் அரசியல் பேசுவோம்.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
கேள்வி:-சசிகலா வெளியே வரும்பட்சத்தில் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- அதற்கான வாய்ப்பு கிடையாது. அவர் அ.தி.மு.க. கட்சியிலேயே இல்லை. அவர் அ.தி.மு.க.வில் சேர 100 சதவீதம் வாய்ப்பில்லை.
கேள்வி:- சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்களே?
பதில்:- பா.ஜனதாவில் அப்படி யார் சொன்னது என்பதை சொல்லுங்கள். அதற்கான பேச்சுவார்த்தையே கிடையாது. அ.தி.மு.க.வில் இதை தெளிவாக முடிவு செய்யப்பட்டு இன்றைக்கும் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.
இன்றைக்கு தமிழகத்தில் அவரிடம் இருந்த பெரும்பாலானோர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். அவரிடம் சிலர் மட்டுமே உள்ளனர். புரட்சித்தலைவி அம்மா, சசிகலாவை பல காலம் நீக்கி வைத்து இருந்தார். அம்மா இறந்த பிறகுதான் அவருக்கு பதவி கொடுத்தார்கள். அம்மா உயிரோடு இருந்தபோது அவர் கட்சியிலேயே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X