என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பேன் - சுவேந்து அதிகாரி உறுதி
Byமாலை மலர்18 Jan 2021 7:37 PM GMT (Updated: 18 Jan 2021 7:37 PM GMT)
நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பேன் என சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த முன்னாள் மந்திரி சுவேந்து கூறியுள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, வருகிற சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அது, திரிணாமுல் காங்கிரசில் இருந்து சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த முன்னாள் மந்திரி சுவேந்து அதிகாரியின் சொந்த தொகுதி ஆகும்.
மம்தா பானர்ஜியின் சவாலை சுவேந்து அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார். கொல்கத்தாவில், பா.ஜனதா ஊழியர்களிடையே அவர் பேசியதாவது:-
திரிணாமுல் காங்கிரஸ் போல், பா.ஜனதா சர்வாதிகாரமாக நடத்தப்படும் கட்சி அல்ல. யார், எங்கு போட்டியிடுவது என்பதை விரிவான ஆலோசனைக்கு பிறகு கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.
ஒருவேளை, நான் நந்திகிராம் தொகுதியில் நிறுத்தப்பட்டால், மம்தா பானர்ஜியை 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன். இல்லாவிட்டால், அரசியலை விட்டு விலகுவேன்.
இந்த தேர்தலுக்கு பிறகு, மம்தா கட்சி வங்காள விரிகுடாவில் தூக்கி வீசப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, வருகிற சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அது, திரிணாமுல் காங்கிரசில் இருந்து சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த முன்னாள் மந்திரி சுவேந்து அதிகாரியின் சொந்த தொகுதி ஆகும்.
மம்தா பானர்ஜியின் சவாலை சுவேந்து அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார். கொல்கத்தாவில், பா.ஜனதா ஊழியர்களிடையே அவர் பேசியதாவது:-
திரிணாமுல் காங்கிரஸ் போல், பா.ஜனதா சர்வாதிகாரமாக நடத்தப்படும் கட்சி அல்ல. யார், எங்கு போட்டியிடுவது என்பதை விரிவான ஆலோசனைக்கு பிறகு கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.
ஒருவேளை, நான் நந்திகிராம் தொகுதியில் நிறுத்தப்பட்டால், மம்தா பானர்ஜியை 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன். இல்லாவிட்டால், அரசியலை விட்டு விலகுவேன்.
இந்த தேர்தலுக்கு பிறகு, மம்தா கட்சி வங்காள விரிகுடாவில் தூக்கி வீசப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X