என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அகமதாபாத், சூரத் மெட்ரோ ரெயில் திட்ட பூமி பூஜை- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
Byமாலை மலர்18 Jan 2021 8:56 AM GMT (Updated: 18 Jan 2021 8:56 AM GMT)
அகமதாபாத் மற்றும் சூரத் நகரங்கள் இன்று மிக முக்கியமான பரிசுகளைப் பெறுவதாக பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி:
அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கம் மற்றும் சூரத் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துகொண்டு, பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் பேசியதாவது:-
அகமதாபாத் மற்றும் சூரத் நகரங்கள் இன்று மிக முக்கியமான பரிசுகளைப் பெறுகின்றன. முந்தைய அரசாங்கங்களின் அணுகுமுறைக்கும் தற்போதைய அரசாங்கத்தின் பணிகளுக்கும் இடையில் உள்ள சிறந்த உதாரணம், நாடு முழுவதும் மெட்ரோ ரெயில் நெட்வொர்க் விரிவாக்கம். 2014க்கு முன்பு, 10-12 ஆண்டுகளில் 225 கி.மீ மெட்ரோ பாதை மட்டுமே செயல்படத் தொடங்கியது. கடந்த 6 ஆண்டுகளில், 450 கி.மீ க்கும் அதிகமான மெட்ரோ நெட்வொர்க் செயல்படத் தொடங்கியது.
நாடு முழுவதும் 27 நகரங்களில் 1000 கி.மீ.க்கும் நீளமான மெட்ரோ ரெயில் பாதைக்கான பணிகள் நடைபெறுகின்றன. மெட்ரோ நெட்வொர்க் தொடர்பாக, நாட்டில் நவீன சிந்தனை இல்லாத ஒரு காலம் இருந்தது. அப்போது மெட்ரோ கொள்கை எதுவும் இல்லை. இதன் விளைவாக, வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு வகையான மெட்ரோ இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X