search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடப்பட்ட காட்சி (கோப்புப்படம்)
    X
    தடுப்பூசி போடப்பட்ட காட்சி (கோப்புப்படம்)

    டெல்லியில் தடுப்பூசி போட்டவர்களில் 51 பேருக்கு லேசான பாதிப்பு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

    டெல்லி மாநிலத்தில் 4,319 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதில் 51 பேர் பாதிக்கப்பட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் நேற்று முதன்முறையாக நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    நேற்றைய தடுப்பூசி பணி முடிந்த பின்னர், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு எந்தவித பின்விளையும் ஏற்படவில்லை எனத்தெரிவித்தது.

    இந்நிலையில் 51 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதாகவும், அதில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி மாநில சுகதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெய்ன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×