என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமி 9 பேரால் கடத்தி கற்பழிப்பு
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள உமரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமி 9 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கற்பழிக்கப்பட்டார்.
இந்த கும்பல் அந்த சிறுமியை 5 நாட்களில் 2 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி 2-வது முறையாக அவர்கள் கடத்தி இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த சிறுமி முதல் பாலியல் பலாத்காரத்துக்கு பிறகு இதுபற்றி புகார் கொடுக்க முன்வரவில்லை.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 6 நாட்களில் நடந்த 4-வது கற்பழிப்பு சம்பவம் இதுவாகும். இதனால் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்