search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமி 9 பேரால் கடத்தி கற்பழிப்பு

    மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை 9 பேர் கொண்ட கும்பல் கடத்தி கற்பழித்தது. இந்த சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள உமரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமி 9 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கற்பழிக்கப்பட்டார்.

    இந்த கும்பல் அந்த சிறுமியை 5 நாட்களில் 2 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி 2-வது முறையாக அவர்கள் கடத்தி இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த சிறுமி முதல் பாலியல் பலாத்காரத்துக்கு பிறகு இதுபற்றி புகார் கொடுக்க முன்வரவில்லை.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 6 நாட்களில் நடந்த 4-வது கற்பழிப்பு சம்பவம் இதுவாகும். இதனால் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

    Next Story
    ×