என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம்- தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்
Byமாலை மலர்17 Jan 2021 7:12 AM GMT (Updated: 17 Jan 2021 7:12 AM GMT)
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம் என்றும், பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஐதராபாத்:
தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும். பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்குகிறது.
2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானது தான் என்பதை உறுதியாக கூறுகிறேன். தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நான் நேரில் சென்று பார்த்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நேற்று ஆளுநர் தமிழிசை துவக்கி வைத்தார். அப்போது அனைத்து முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X