என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும்பணி திடீர் நிறுத்தம்
Byமாலை மலர்16 Jan 2021 7:43 PM GMT (Updated: 16 Jan 2021 7:43 PM GMT)
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,91,181 பேருக்கு
குறிப்பாக, மகாராஷ்டிராவில் நேற்று 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.
இந்த தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்வதற்கு 2 நாட்கள் ஆகும் என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. தொழில்நுடபக்கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் மகாராஷ்டிரா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுடபக்கோளாறு ஏற்படுவதற்கு முன்புவரை மகாராஷ்டிராவில் நேற்று 18 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, நேற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 64.34 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,91,181 பேருக்கு
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் கோவின் எனப்படும் செயலியில் உதவியுடன் நடைபெறுகிறது.
தடுப்பூசி செலுத்த பதிவு செய்தவர்களுக்கு இந்த கோவின் செயலி மூலம் செய்தி அனுப்பப்படுகிறது. அந்த தகவலின் அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடத்திற்கு வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.
குறிப்பாக, மகாராஷ்டிராவில் நேற்று 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக பயன்படுத்தப்படும் ’கோவின்’ செயலியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது.
தடுப்பூசி போட உள்ளவர்களுக்கு கோவின் செயலி மூலம் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் கால தாமதமாக பயனாளர்களை சென்றடைகிறது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் தடுப்பூசி போடும் மையத்திற்கு வருவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்த தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்வதற்கு 2 நாட்கள் ஆகும் என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. தொழில்நுடபக்கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் மகாராஷ்டிரா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுடபக்கோளாறு ஏற்படுவதற்கு முன்புவரை மகாராஷ்டிராவில் நேற்று 18 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, நேற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 64.34 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X