என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவல்துறை தலைமை அலுவலகம் அருகில் பெண்ணுக்கு நடந்த கொடுமை
Byமாலை மலர்16 Jan 2021 4:01 AM GMT (Updated: 16 Jan 2021 4:01 AM GMT)
மத்திய பிரதேச மாநிலத்தில் காவல்துறை தலைமையகத்தின் அருகில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நீலம் பூங்காவில் நேற்று முன்தினம் இரவு 35 வயது மதிக்கத்தக்க பெண் தனியாக இருந்துள்ளார்.
தினக்கூலி வேலை பார்க்கும் அந்தப் பெண், உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போது நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட அவர், நீலம் பூங்காவில் சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம் என அமர்ந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், அந்தப் பெண்ணை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். காவல்துறை தலைமை அலவலகத்தின் அருகில், சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காவல்துறை தலைமை அலுவலகம் அருகில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சந்தேகத்தின்பேரில் 25 வயது நிரம்பிய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் நீலம் பூங்கா அருகில் ஜவுளிக்கடை வைத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X