என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகா சாலை விபத்தில் 10 பெண்கள், டிரைவர் பலி- பிரதமர் மோடி இரங்கல்
Byமாலை மலர்15 Jan 2021 9:21 AM GMT (Updated: 15 Jan 2021 9:21 AM GMT)
கர்நாடக மாநிலத்தில் இன்று மினி பேருந்தும், டிப்பர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் உயிரிழந்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் இன்று காலையில் மினி பேருந்தும், டிப்பர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இத்திகாட்டி கிராமத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், மினி பேருந்து முற்றிலும் சிதைந்தது. லாரியின் முன்பகுதியும் நொறுங்கியது. மினி பேருந்தின் டிரைவர், 10 பெண்கள் என மொத்தம் 11 பேர் பலியாகினர். 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள், தேவநாகரி மாவட்டத்தில் உள்ள ஒரு மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் ஆவர். விடுமுறையை கொண்டாடுவதற்காக கோவா சென்றபோது அவர்களின் பேருந்து விபத்தில் சிக்கி உள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X