search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபேஷ் குமார் சிங்
    X
    ரூபேஷ் குமார் சிங்

    பீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக் கொலை

    பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்
    பாட்னா:

    பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன மேலாளராகப் பணியாற்றிய ரூபேஷ் குமார் சிங் பணி முடிந்து காரில் வீட்டுக்குத் திரும்பினார்.

    மாலை 7 மணிக்கு வீட்டு முன் காரை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத ஆட்கள் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே  அவர் உயிரிழந்தார். அந்தக் குடியிருப்பில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும் அவை செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    Next Story
    ×