என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா மற்றும் பொது முடக்கத்தால் ரூ. 1.56 லட்சம் கோடி வருவாய் இழப்பு: கேரளா அமைச்சர்
Byமாலை மலர்14 Jan 2021 4:02 PM GMT (Updated: 14 Jan 2021 4:02 PM GMT)
இயற்கை சீற்றத்தால் ஏற்கனவே பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா மற்றும் பொது முடக்கத்தால் ரூ. 1.56 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கேரள மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கையை அம்மாநில நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசாக் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அப்போது ஏற்கனவே 2019-2020-ல் ஒக்கி புயல் மற்றும் இரண்டு வெள்ளப் பேரழிவு காரணமாக பொருளாதாரம் சிக்கலை சந்தித்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் கேரள மாநிலத்திற்கு 1.56 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாளைய பட்ஜெட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்க அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சத்திற்கு மேலான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதார சரிவு கடந்த ஆண்டைவிட 3.45 சதவீதம் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X