search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    எந்தவொரு வல்லரசும் நம் சுயமரியாதையை தீண்டினால் தக்க பதிலடி: ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கை

    எந்தவொரு வல்லரசு நாடும் நம் சுயமரியாதையை தீண்டினால் தக்க பதிலடி கிடைக்கும் என சீனாவிற்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் வலுவான செய்தியை கூறி உள்ளார்.
    பெங்களூருவில் நடைபெற்ற ஆயுதப்படை படைவீரர் தினத்தில் கலந்து கொண்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  பேசும்போது கூறியதாவது:-

    நாங்கள் போரை விரும்பவில்லை, அனைவரின் பாதுகாப்பையும் பாதுகாக்க நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். ஆனால் எந்தவொரு வல்லரசும் எங்களது சுயமரியாதையை புண்படுத்த விரும்பினால், எங்கள் வீரர்கள் ஒரு பொருத்தமான பதிலடி கொடுக்க வல்லவர்கள்.

    இது நமது இரத்தத்திலும் கலாச்சாரத்திலும் இருப்பதால் மற்ற நாடுகளுடன் அமைதியான மற்றும் நட்பான உறவை இந்தியா விரும்புகிறது.

    கிழக்கு லடாக்கில் சீனாவுடனான மோதலின்போது இந்திய வீரர்கள் துணிச்சலையும் பொறுமையையும் வெளிப்படுத்தினர். அதை எடுத்து கூறினால் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
    Next Story
    ×