search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலி

    மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் மான்பூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலியானார்கள்.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் மான்பூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலியானார்கள். 7 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் குவாலியரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுராக் சுஜானியா தெரிவித்தார். கள்ளச்சாராயத்தில் விஷத்தன்மை இருந்ததா என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×