search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கேரளாவுக்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

    கேரள மாநிலத்திற்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நாளை சென்றடைய உள்ளதென அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக்குப்பின், வரும் 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. புனேவில் இருந்து நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

    இந்நிலையில், கேரள மாநிலத்திற்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் விமானம் மூலமாக வரும் ஜனவரி 13-ம் தேதி (நாளை) திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுதொடர்பாக கேரள சுகாதாரத் துறை மந்திரி கே.கே.சைலஜா பேசுகையில், “கேரளாவிற்கு வரவிருக்கும் 4,33,500 தடுப்பூசிகளில், திருவனந்தபுரத்திற்கு 1,34,000 தடுப்பூசிகளும், எர்ணாகுளத்திற்கு 1,80,000 தடுப்பூசிகளும், கோழிக்கோடு 1,19,500 தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன. கோழிகோட்டில் இருந்து சுமார் 1,100 தடுப்பூசிகள் மகேவில் விநியோகிக்கப்படும்.

    கேரளாவில் முதல்கட்டமாக 133 மையங்களில் சனிக்கிழமை தடுப்பூசி போடப்படும். அனைத்து மையங்களிலும் தடுப்பூசிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 3,62,870 பேர் தடுப்பூசிக்கு பதிவு செய்துள்ளனர். அதில் அரசுத் துறையில் 1,70,259 பேரும், தனியார் துறையில் 1,92,611 பேரும் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.
    Next Story
    ×