என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள் சிக்கியது - நாசவேலை முறியடிப்பு
Byமாலை மலர்10 Jan 2021 9:26 PM GMT (Updated: 10 Jan 2021 9:26 PM GMT)
ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகளுடன் இருந்த மோட்டார் சைக்கிளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நாசவேலைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் எல்லை பாதுகாப்பு படையினரும், ராஷ்டிரீய ரைபிள் படையினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மெந்தூர் செக்டாரில் உள்ள கோலத் ரீலன்-மெந்தூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு வீரர்கள் சந்தேகத்தின் பேரில் ஒரு மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 2.4 கிலோ எடையுள்ள கையெறி குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய வீரர்கள், அதில் இருந்த கையெறி குண்டுகளை பத்திரமாக அகற்றி செயலிழக்கச் செய்தனர்.
இதன்மூலம் பயங்கரவாதிகளின் நாசவேலை முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு காரணமான பயங்கரவாதிகளை வனப்பகுதிக்கு சென்று தேடி வருவதாகவும் பூஞ்ச் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் அங்க்ரால் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X