என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி- சுகாதார அமைச்சர் தகவல்
Byமாலை மலர்8 Jan 2021 6:26 PM GMT (Updated: 8 Jan 2021 6:26 PM GMT)
கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்குகிறது. கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 124 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் மாநிலத்திற்கு ஒன்றிரண்டு நாட்களில் கொரோனா தடுப்பூசிகள் வரப்போகிறது. திங்கள்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது:-
கர்நாடகாவுக்கு ஒரு பெரிய நல்ல செய்தி மத்திய சுகாதார அமைச்சகத்திடமிருந்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக 13,90,000 தடுப்பூசி டோஸ்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் கர்நாடகாவிற்கு வரும். திங்கள்கிழமை முதல் (ஜனவரி 11 ) முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படும். இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சியான செய்தி என்று அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X