என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
50 வயது அங்கன்வாடி ஊழியருக்கு நடந்த பயங்கரம்- 3 பேரை தேடுகிறது போலீஸ்
Byமாலை மலர்6 Jan 2021 3:57 AM GMT (Updated: 6 Jan 2021 3:57 AM GMT)
உத்தர பிரதேசத்தில் அங்கன்வாடி பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பதான்:
உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டம் உகைத்தி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் உறவினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரைத் தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு சங்கல்ப் சர்மா தெரிவித்தார்.
அங்கன்வாடி ஊழியருக்கு நடந்த இந்த கொடுமை அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X