என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அடுத்தடுத்து 20 செயற்கைக்கோள்களை ஏவ திட்டம்- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
பெங்களூரு:
கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு அக்டோபர் வரை செயற்கை கோள் விண்ணில் செலுத்தும் பணியை நிறுத்தி வைத்திருந்த இஸ்ரோ, இந்தாண்டு பல செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
விண்வெளி ஆராய்ச்சியில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நமது விண்வெளி ஆராய்ச்சி மையம் ( இஸ்ரோ) உள்ளது.
கடந்த நவம்பர் 11-ம் தேதி இஸ்ரோ சார்பில் கடைசி செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக திட்டமிட்ட பல செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது . கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பி.எஸ்.எல்.வி. சி.49 மற்றும் சி.50 ஆகிய ஏவுகனை மூலம் இரு செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலுவையில் உள்ள சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 மற்றும் ககன்யான் உள்பட 20-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும். கொரோனா தொற்று காலத்தில் செயற்கை கோள்கள் செலுத்தும்பணி நிறுத்தப்பட்டிருந்தலும் ஆராய்ச்சி பணிகள் எந்த தொய்வுமில்லாமல் நடந்தது. 2021-ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய மையில் கல்லாக அமையும் இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்