என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4-வது காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - மத்திய அரசு தகவல்
Byமாலை மலர்31 Dec 2020 8:36 PM GMT (Updated: 31 Dec 2020 8:36 PM GMT)
2020-21-ம் நிதியாண்டின் மார்ச் 31-ந்தேதி வரையிலான கடைசி காலாண்டில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டு அடிப்படையில் மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2020-21-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டுக்கான (ஜனவரி-மார்ச்) வட்டி விகிதத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘2020-21-ம் நிதியாண்டின் மார்ச் 31-ந்தேதி வரையிலான கடைசி காலாண்டில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 3-வது காலாண்டுக்கு (அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை) வெளியிடப்பட்டு இருந்த வட்டி விகிதமே தொடரும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்தவகையில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றுக்கு ஆண்டு வட்டி விகிதம் முறையே 7.1 மற்றும் 6.8 சதவீதமாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கான ஐந்தாண்டு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதமாக தக்க வைக்கப்பட்டு உள்ளது.
இதைப்போல சேமிப்பு முதலீடுகளுக்கான ஆண்டு வட்டி விகிதமும் 4 சதவீதமாக தக்க வைக்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டு அடிப்படையில் மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2020-21-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டுக்கான (ஜனவரி-மார்ச்) வட்டி விகிதத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘2020-21-ம் நிதியாண்டின் மார்ச் 31-ந்தேதி வரையிலான கடைசி காலாண்டில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 3-வது காலாண்டுக்கு (அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை) வெளியிடப்பட்டு இருந்த வட்டி விகிதமே தொடரும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்தவகையில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றுக்கு ஆண்டு வட்டி விகிதம் முறையே 7.1 மற்றும் 6.8 சதவீதமாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கான ஐந்தாண்டு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதமாக தக்க வைக்கப்பட்டு உள்ளது.
இதைப்போல சேமிப்பு முதலீடுகளுக்கான ஆண்டு வட்டி விகிதமும் 4 சதவீதமாக தக்க வைக்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X