என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி அவருடன் இருப்பதாக கூறி வைரலாகும் புகைப்படம்
Byமாலை மலர்31 Dec 2020 5:02 AM GMT (Updated: 31 Dec 2020 5:02 AM GMT)
அவருடன் பிரதமர் மோடி இருப்பதாக கூறி பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உடன் பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக கூறி பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் ஆர்எஸ்எஸ் முகாமில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பிரதமர் மோடி அருகில் இருப்பது மறைந்த ஆர்எஸ்எஸ் லக்ஷமன்ராவ் இனம்தர் ஆகும். எனினும், அதில் இருப்பது சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே என கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக தற்சமயம் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க போவதாக அண்ணா ஹசாரே கூறியிருந்தார். இதை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் அண்ணா ஹசாரே இருப்பதாக கூறி பழைய புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருப்பது அண்ணா ஹசாரே இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X