என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனவரி மாத ரூ.300 கட்டண டிக்கெட் இன்று வெளியீடு
Byமாலை மலர்30 Dec 2020 8:00 AM GMT (Updated: 30 Dec 2020 8:00 AM GMT)
வருகிற 4-ந்தேதி முதல் ஜனவரி மாதம் இறுதி வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று திருமலை- திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலை பாதையில் மருத்துவ முதலுதவி மையங்கள் உள்ளது. இந்த மையங்களை இணை செயல் அதிகாரி பசந்த்குமார் அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருமலைக்கு நடைபாதையில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. அப்போது அனைத்து வசதிகளுடன் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் விதமாக இருக்க வேண்டும்.
ஆகையால் அலிபிரி மலைப்பாதையில் உள்ள 4 மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் உள்ள முதலுதவி மைய கட்டிடங்களுக்கு தேவையான பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி மற்றும் வயர்லென் செட் அமைப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.
ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் மேலும் 2 முதலுதவி மையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 25-ந்தேதியில் இருந்து வருகிற 3-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் நுழைவு தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஏற்கனவே 3-ந்தேதி வரை ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி முதல் ஜனவரி மாதம் இறுதி வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று திருமலை- திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலை பாதையில் மருத்துவ முதலுதவி மையங்கள் உள்ளது. இந்த மையங்களை இணை செயல் அதிகாரி பசந்த்குமார் அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருமலைக்கு நடைபாதையில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. அப்போது அனைத்து வசதிகளுடன் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் விதமாக இருக்க வேண்டும்.
ஆகையால் அலிபிரி மலைப்பாதையில் உள்ள 4 மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் உள்ள முதலுதவி மைய கட்டிடங்களுக்கு தேவையான பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி மற்றும் வயர்லென் செட் அமைப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.
ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் மேலும் 2 முதலுதவி மையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 25-ந்தேதியில் இருந்து வருகிற 3-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் நுழைவு தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஏற்கனவே 3-ந்தேதி வரை ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி முதல் ஜனவரி மாதம் இறுதி வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று திருமலை- திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X