search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதியில் கடந்த 3 நாட்களில் ரூ.9 கோடி உண்டியல் வசூல்

    திருப்பதியில் கடந்த 3 நாட்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 30 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரூ.9 கோடியே 43 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 25-ந்தேதி முதல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வழக்கமாக 2 நாளைக்கு மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வந்த நிலையில் இம்முறை ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    அதன்படி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் வழியாக கடந்த 3 நாட்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 30 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 3 நாட்களில் ரூ.9 கோடியே 43 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×