என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர் உயிரிழந்ததாக கூறி வைரலாகும் பகீர் தகவல்
Byமாலை மலர்28 Dec 2020 4:54 AM GMT (Updated: 28 Dec 2020 4:54 AM GMT)
கொரோனாவைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர் திடீரென உயிரிழந்தார் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
கொரோனாவைரஸ் பாதிப்பை விட அதைபற்றி சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் அதிக ஆபத்து நிறைந்தவையாக உள்ளன. உலகையே அடியோடு மாற்றியிருக்கும் நிலையில், கொரோனா தொற்று பற்றிய போலி தகவல்கள் பாரபட்சமின்றி வைரலாகி வருகின்றன.
அந்த வரிசையில், கொரோனாவைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட செவலியர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் என கூறும் தகவல் தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவில் செவிலியராக இருக்கும் டிபானி டோவர் பி-பைசர் பயோ என்டெக் தடுப்பூசி போட்டுக் கொண்டதும் மயங்கி விழுந்தார். தற்சமயம் இவர் உயிரிழந்துவிட்டார் என வைரல் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அவர் மரணிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மரணித்ததாக கூறப்படும் செவலியர் மீண்டும் பணியாற்றியிருக்கிறார் என அவர் பணியாற்றும் மருத்துவமனையின் விளம்பர பரிவு அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.
அந்த வகையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் உயிரிழந்தார் என கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X