search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள்
    X
    கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள்

    ஜார்க்கண்டில் 5 மாவோயிஸ்டுகள் கைது- துப்பாக்கிகள் பறிமுதல்

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்டுகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    கும்லா:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக விரோத செயல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒழிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

    இந்நிலையில், கும்லா மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 5 பேரும் வியாபாரிகளிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் அவர்களை கைது செய்திருப்பதாக மாவட்ட எஸ்.பி.  தெரிவித்தார். மேலும், சிலர் தப்பிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×