search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)
    X
    தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)

    சோபியான் என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்

    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் கனிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று காலையில் அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

    அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்பு படயினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடபெறுகிறது.
    Next Story
    ×