search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை

    கர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் நேற்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. மாநிலத்தில் புதிதாக 1,005 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 13 ஆயிரத்து 483 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 1,005 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 14 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 44 ஆக உயர்ந்துள்ளது.

    பாகல்கோட்டையில் 2 பேர், பல்லாரியில் 13 பேர், பெலகாவியில் 13 பேர், பெங்களூரு புறநகரில் 17 பேர், பெங்களூருவில் 578 பேர், பீதரில் 5 பேர், சாம்ராஜ்நகரில் 12 பேர், சிக்பள்ளாப்பூரில் 15 பேர், சிக்கமகளூருவில் 10 பேர், சித்ரதுர்காவில் 13 பேர், தட்சிண கன்னடாவில் 30 பேர், தாவணகெரேயில் 7 பேர், தார்வாரில் 13 பேர், கதக்கில் 6 பேர், ஹாசனில் 43 பேர், ஹாவேரியில் 2 பேர், கலபுரகியில் 34 பேர், குடகில் 5 பேர், கோலாரில் 3 பேர், கொப்பலில் 3 பேர், மண்டியாவில் 24 பேர், மைசூருவில் 79 பேர், ராய்ச்சூரில் 4 பேர், ராமநகரில் 6 பேர், சிவமொக்காவில் 7 பேர், துமகூருவில் 19 பேர், உடுப்பியில் 13 பேர், உத்தரகன்னடாவில் 14 பேர், விஜயாப்புராவில் 12 பேர், யாதகிரியில் 3 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு நகரில் 4 பேர், தார்வாரில் ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று 1,102 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 88 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் 13 ஆயிரத்து 508 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் 208 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் நேற்று 98 ஆயிரத்து 568 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியே 35 லட்சத்து 14 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் கொரோனாவால் நிகழும் மரணங்கள் வெகுவாக குறைந்துள்ளன. இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று 28 மாவட்டங்களில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×