search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் பதிவு

    புதிய வகை வைரஸ் பரவுவதாக கூறப்படும் நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 11 ஆயிரத்து 382 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 958 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 340 ஆக உயர்ந்து உள்ளது. புதிய வகை வைரஸ் பரவுவதாக கூறப்படும் நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி இருந்தது.

    வைரஸ் தொற்றுக்கு மேலும் 9 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்து 38 ஆக உயர்ந்தது. புதிதாக பாகல்கோட்டையில் ஒருவர், பல்லாரியில் 20 பேர், பெலகாவியில் 22 பேர், பெங்களூரு புறநகரில் 17 பேர், பெங்களூரு நகரில் 550 பேர், பீதரில் 6 பேர், சாம்ராஜ்நகரில் 27 பேர், சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூருவில் தலா 7 பேர், சித்ரதுர்காவில் 18 பேர், தாவணகெரேயில் 7 பேர், தார்வாரில் 12 பேர், கதக்கில் 8 பேர், ஹாசனில் 26 பேர், ஹாவேரியில் 2 பேர், கலபுரகியில் 18 பேர், குடகில் ஒருவர், கோலாரில் 14 பேர், கொப்பலில் 5 பேர், மண்டியாவில் 15 பேர், மைசூருவில் 43 பேர், ராய்ச்சூரில் 7 பேர், ராமநகரில் 8 பேர், சிவமொக்காவில் 13 பேர், துமகூருவில் 50 பேர், உடுப்பியில் 8 பேர், உத்தர கன்னடாவில் 13 பேர், விஜயாப்புராவில் 17 பேர், யாதகிரியில் 2 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பெங்களூரு நகரில், ஹாசன், மைசூருவில் தலா 2 பேர், துமகூரு, பல்லாரி, பீதரில் தலா ஒருவர் என 9 பேர் இறந்தனர். 24 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. நேற்று 1, 206 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இதன்மூலம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 86 ஆயிரத்து 547 ஆக உயர்ந்து உள்ளது. 13 ஆயிரத்து 736 பேர் சிகிச்சையில் உள்ளனர். 217 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

    நேற்று 99 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதன்மூலம் மொத்த பரிசோதனைகள் எண்ணிக்கை 1 கோடியே 33 லட்சத்து 17 ஆயிரத்து 70 ஆக உயர்ந்து உள்ளது.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×