என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்காக தமிழகத்துக்கு இதுவரை ரூ.3,191 கோடி கடன்
Byமாலை மலர்21 Dec 2020 9:33 PM GMT (Updated: 21 Dec 2020 9:33 PM GMT)
ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்காக தமிழகத்துக்கு இதுவரை ரூ.3 ஆயிரத்து 191.24 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீட்டுக்காக தமிழகம் உள்பட 23 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு 8-வது வார தவணையாக ரூ.6 ஆயிரம் கோடி கடன் தற்போது வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்து உள்ளது. இதில், டெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ.483.40 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.
23 மாநிலங்களை தவிர்த்து மீதமுள்ள அருணாசலபிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. மூலமான வருவாயில் பற்றாக்குறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 8-வது தவணைக்கான கடன்தொகையை 4.19 சதவீத வட்டிக்கு மத்திய அரசு பெற்றுள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை ரூ.48 ஆயிரம் கோடி கடனை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் மத்திய அரசு பெற்று மாநிலங்களுக்கு வழங்கி உள்ளது. இதுதவிர ரூ.1 லட்சத்து 6,830 கோடி கடனை மாநிலங்கள் கூடுதலாக பெறுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போது பகிரப்பட்ட கடன்தொகையையும் சேர்த்து தமிழகத்துக்கு இதுவரை ரூ.3 ஆயிரத்து 191.24 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் ரூ.9,627 கோடி கடனை கூடுதலாக பெற அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீட்டுக்காக தமிழகம் உள்பட 23 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு 8-வது வார தவணையாக ரூ.6 ஆயிரம் கோடி கடன் தற்போது வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்து உள்ளது. இதில், டெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ.483.40 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.
23 மாநிலங்களை தவிர்த்து மீதமுள்ள அருணாசலபிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. மூலமான வருவாயில் பற்றாக்குறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 8-வது தவணைக்கான கடன்தொகையை 4.19 சதவீத வட்டிக்கு மத்திய அரசு பெற்றுள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை ரூ.48 ஆயிரம் கோடி கடனை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் மத்திய அரசு பெற்று மாநிலங்களுக்கு வழங்கி உள்ளது. இதுதவிர ரூ.1 லட்சத்து 6,830 கோடி கடனை மாநிலங்கள் கூடுதலாக பெறுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போது பகிரப்பட்ட கடன்தொகையையும் சேர்த்து தமிழகத்துக்கு இதுவரை ரூ.3 ஆயிரத்து 191.24 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் ரூ.9,627 கோடி கடனை கூடுதலாக பெற அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X