என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை - பாஜக தலைவர் பேச்சு
Byமாலை மலர்21 Dec 2020 3:59 PM GMT (Updated: 21 Dec 2020 3:59 PM GMT)
கொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் தன்னை ஒன்றும் செய்யமுடியவில்லை என்று மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:
இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய பணிக்கு இடமாற்றம் செய்த விவகாரத்திலும் மத்திய பாஜக அரசுக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகிறது.
இந்நிலையில், மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் துர்காபூர் பகுதியில் இன்று தேர்தல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
என்றார்.
மேற்குவங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரசும், இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜகவும் தீவிர முயற்சி
மேற்கொண்டு வருகிறது.இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய பணிக்கு இடமாற்றம் செய்த விவகாரத்திலும் மத்திய பாஜக அரசுக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகிறது.
இந்நிலையில், மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் துர்காபூர் பகுதியில் இன்று தேர்தல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை. கொரோனாவுக்கு நாம் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டோம். ஆனாலும், வைரஸ் எப்போது போகும் என நமக்கு தெரியாது. ஆனால், மேற்குவங்காளத்தில் இருந்து அடுத்த மே மாதம் திரிணாமுல் காங்கிரஸ் காணாமல் போய்விடும். திரிணாமுல் காங்கிரஸ் வைரசுக்கு நான் தடுப்பூசி வைத்துள்ளேன்
என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X