என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உ.பி. விவசாயிகள் டிராக்டர் பேரணி
Byமாலை மலர்20 Dec 2020 9:02 PM GMT (Updated: 20 Dec 2020 9:02 PM GMT)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
லக்னோ:
விவசாயிகளின் நலன்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த நவம்பர் 26-ம் தேதி டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.
விவசாயிகளின் இந்த போராட்டம் 3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசுடனான பல சுற்று பேச்சுவார்த்தை பலனற்று தோல்வியில் முடிந்தது. இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு முறை போன்றவற்றுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. எனினும், அவற்றை ஏற்க மறுத்து விவசாயிகளின் போராட்டம் 25வது நாளை எட்டியது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள விவசாயிகளில் ஒரு தரப்பினர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இந்து மஜ்தூர் விவசாய சமிதி என்ற வேளாண் அமைப்பினை சேர்ந்த விவசாயிகள் மற்றும் உறுப்பினர்கள் உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள பர்த்தாபூர் பகுதியில் இருந்து காசியாபாத் நகரின் இந்திராபுரம் நோக்கி டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்டு சென்றுள்ளனர்.
அவர்கள் தங்களது வாகனங்களில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பேனர்களைக் கட்டி வைத்தும், தேசிய கொடியை வாகனங்களின் முன்புறம் பறக்க விட்டபடியும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X