என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
Byமாலை மலர்17 Dec 2020 12:53 PM GMT (Updated: 17 Dec 2020 12:53 PM GMT)
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி அரசு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், சட்டங்களின் நகலை சட்டமன்றத்திலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார்.
புதுடெல்லி:
டெல்லி சட்டமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது டெல்லி அரசு. விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி எம்எல்ஏகள் மகேந்திர கோயல் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்ட நகல்களை டெல்லி சட்டமன்றத்திற்குள் கிழித்தெரிந்தார்.
இவரைத்தொடர்ந்து வேளாண் சட்டங்களின் நகலை சட்டமன்றத்திலேயே கிழித்தெறிந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். மேலும் அவர் பேசுகையில், கொரோனா காலத்திலும் அவசர அவசரமாக வேளாண் சட்டங்களை கொண்டு வர வேண்டிய தேவை என்ன எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசு போல மத்திய அரசு செயல்படக்கூடாது என்றும் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X